என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க இந்திய என்ஜினீயர் ஸ்ரீநீவாசின் மனைவிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு
Byமாலை மலர்12 Jan 2018 10:07 AM GMT (Updated: 12 Jan 2018 10:07 AM GMT)
அமெரிக்காவில் கென்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்ரீநீவாசின் மனைவிக்கு, அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க அதிபர் டிரம்ப் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில், பாராளுமன்ற கூட்டு அமர்வில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்த உரை, ஸ்டேட் ஆப் யூனியன், என அழைக்கப்படுகிறது. இந்த உரையில், நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
அவ்வகையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 30-ம் தேதி கூட்டு அமர்வில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, கென்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியர் ஸ்ரீநிவாசின் மனைவி சுனையானா துமாலாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கான்ஸாஸ் நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இரவு உணவு விடுதியில் இருந்த 2 இந்தியர்களை ‘நாட்டை விட்டு வெளியேறு' என்று கூறியபடியே அந்நாட்டு கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆடம் புரின்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) உயிரிழந்தார்.
தற்போது, அவரது மனைவியை அதிபர் உரையாற்ற உள்ள பாராளுமன்ற கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதிபர் டிரம்ப் சார்பில் எம்.பி. கெவின் யோடர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவே சுனையானாவை அழைத்தாக கெவின் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில், பாராளுமன்ற கூட்டு அமர்வில் அதிபர் உரையாற்றுவது வழக்கம். இந்த உரை, ஸ்டேட் ஆப் யூனியன், என அழைக்கப்படுகிறது. இந்த உரையில், நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.
அவ்வகையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 30-ம் தேதி கூட்டு அமர்வில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, கென்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியர் ஸ்ரீநிவாசின் மனைவி சுனையானா துமாலாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கான்ஸாஸ் நகரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி இரவு உணவு விடுதியில் இருந்த 2 இந்தியர்களை ‘நாட்டை விட்டு வெளியேறு' என்று கூறியபடியே அந்நாட்டு கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆடம் புரின்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) உயிரிழந்தார்.
தற்போது, அவரது மனைவியை அதிபர் உரையாற்ற உள்ள பாராளுமன்ற கூட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதிபர் டிரம்ப் சார்பில் எம்.பி. கெவின் யோடர் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவே சுனையானாவை அழைத்தாக கெவின் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X