என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடு கடத்தல் வழக்கு: இங்கிலாந்து கோர்ட்டில் விஜய்மல்லையா ஆஜர்
Byமாலை மலர்12 Jan 2018 7:08 AM GMT (Updated: 12 Jan 2018 7:08 AM GMT)
லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் விஜய்மல்லையா ஆஜரானார்.#VijayMallaya
லண்டன்:
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை. அதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க இவர் லண்டனுக்கு தப்பி ஓடினார். தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி இங்கிலாந்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அவர் லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி கைது செய்தனர்.
ஆனால் ரூ.5 கோடி ஜாமீன் தொகை செலுத்தி கைதான 3 மணி நேரத்தில் விஜய் மல்லையா வெளியே வந்தார்.
இதற்கிடையே, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விஜய்மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது.
அதில் விஜய்மல்லையா நீதிபதி எம்மா ஆர் புத்தூட் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களையும், வாத பிரதிவாதங்களையும் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். #VijayMallaya #TamilNews
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தவில்லை. அதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க இவர் லண்டனுக்கு தப்பி ஓடினார். தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரி இங்கிலாந்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதை தொடர்ந்து அவர் லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி கைது செய்தனர்.
ஆனால் ரூ.5 கோடி ஜாமீன் தொகை செலுத்தி கைதான 3 மணி நேரத்தில் விஜய் மல்லையா வெளியே வந்தார்.
இதற்கிடையே, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விஜய்மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடந்தது.
அதில் விஜய்மல்லையா நீதிபதி எம்மா ஆர் புத்தூட் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களையும், வாத பிரதிவாதங்களையும் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். #VijayMallaya #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X