என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்கிறார் அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு
Byமாலை மலர்9 Jan 2018 10:19 PM GMT (Updated: 9 Jan 2018 10:19 PM GMT)
சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #WorldEconomicForum #DonaldTrump
வாஷிங்டன்:
சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார கருத்தரங்கு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் தலைவர்கள், தனியார் நிறுவன சி.இ.ஓ.க்கள் பங்கேற்கின்றனர். 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கருத்தமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தனது அமர்வை தாவோஸ் நகரில் நடத்துகிறது.
இந்த கருத்தரங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று உலக தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதில் அமெரிக்க வணிகம், அமெரிக்க தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் பற்றி பேசவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக 22-ம் தேதி சுவிட்சர்லாந்து செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஆலைன் பெர்செட் உடன் சந்தித்து பேசுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி இதில் பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldEconomicForum #DonaldTrump #tamilnews
சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார கருத்தரங்கு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் தலைவர்கள், தனியார் நிறுவன சி.இ.ஓ.க்கள் பங்கேற்கின்றனர். 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கருத்தமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தனது அமர்வை தாவோஸ் நகரில் நடத்துகிறது.
இந்த கருத்தரங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று உலக தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதில் அமெரிக்க வணிகம், அமெரிக்க தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் பற்றி பேசவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.
உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக 22-ம் தேதி சுவிட்சர்லாந்து செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஆலைன் பெர்செட் உடன் சந்தித்து பேசுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி இதில் பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldEconomicForum #DonaldTrump #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X