search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்கிறார் அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு
    X

    உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்கிறார் அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு

    சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #WorldEconomicForum #DonaldTrump
    வாஷிங்டன்:

    சுவிட்சர்லாந்தில் நடக்கவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் உலக பொருளாதார கருத்தரங்கு வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 3 ஆயிரம் தலைவர்கள், தனியார் நிறுவன சி.இ.ஓ.க்கள் பங்கேற்கின்றனர். 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கருத்தமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தனது அமர்வை தாவோஸ் நகரில் நடத்துகிறது.



    இந்த கருத்தரங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ள உள்ளார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்று உலக தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளதை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதில் அமெரிக்க வணிகம், அமெரிக்க தொழில்துறை மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் பற்றி பேசவுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    உலக பொருளாதார கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக 22-ம் தேதி சுவிட்சர்லாந்து செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் ஆலைன் பெர்செட் உடன் சந்தித்து பேசுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் மோடி இதில் பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #WorldEconomicForum #DonaldTrump #tamilnews
    Next Story
    ×