என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது பாலஸ்தீன்
Byமாலை மலர்1 Jan 2018 10:04 AM GMT (Updated: 1 Jan 2018 10:04 AM GMT)
ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா மதிக்காத நிலையில், அந்நாட்டுக்கான தனது தூதரை திரும்ப அழைத்து பாலஸ்தீனம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
ரமல்லா:
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்தார். உலகம் முழுவதும் எதிர்ப்பை சம்பாதித்த டிரம்ப், தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஐ.நா தீர்மானத்தை மதிக்காத அமெரிக்கா, தனது செயல்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பங்கேற்கப்போவதில்லை என பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லத்-ஐ திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன வெளியுறவு மந்திரி ரியாத் அல் மாலிகி அறிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறைகள் முடிந்ததும் ஹுசாம் சோம்லத் நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக ரியாத் அல் மாலிகி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்தார். உலகம் முழுவதும் எதிர்ப்பை சம்பாதித்த டிரம்ப், தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஐ.நா தீர்மானத்தை மதிக்காத அமெரிக்கா, தனது செயல்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பங்கேற்கப்போவதில்லை என பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லத்-ஐ திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன வெளியுறவு மந்திரி ரியாத் அல் மாலிகி அறிவித்துள்ளார்.
புத்தாண்டு விடுமுறைகள் முடிந்ததும் ஹுசாம் சோம்லத் நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக ரியாத் அல் மாலிகி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X