search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது பாலஸ்தீன்
    X

    ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்தது பாலஸ்தீன்

    ஜெருசலேம் விவகாரத்தில் ஐ.நா தீர்மானத்தை அமெரிக்கா மதிக்காத நிலையில், அந்நாட்டுக்கான தனது தூதரை திரும்ப அழைத்து பாலஸ்தீனம் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
    ரமல்லா:

    இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் டிரம்ப் அறிவித்தார். உலகம் முழுவதும் எதிர்ப்பை சம்பாதித்த டிரம்ப், தனது அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், ஐ.நா தீர்மானத்தை மதிக்காத அமெரிக்கா, தனது செயல்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக எத்தனை பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதில் பங்கேற்கப்போவதில்லை என பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவுக்கான பாலஸ்தீன தூதர் ஹுசாம் சோம்லத்-ஐ திரும்ப அழைத்துக்கொள்வதாக பாலஸ்தீன வெளியுறவு மந்திரி ரியாத் அல் மாலிகி அறிவித்துள்ளார்.

    புத்தாண்டு விடுமுறைகள் முடிந்ததும் ஹுசாம் சோம்லத் நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக ரியாத் அல் மாலிகி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×