search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமன் நாட்டில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிப்பு
    X

    ஏமன் நாட்டில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரிப்பு

    இரட்டை ஆட்சிமுறை நிலவி வரும் ஏமன் நாட்டில் காலரா எனப்படும் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்துள்ளது.
    சனா:

    ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. 

    ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடணப்படுத்தியது,

    சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவியது. உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் முகாம்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளும் ஏராளமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ஏமனில் சுமார் பத்து லட்சம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 76 லட்சம் மக்கள் காலரா அபாயத்துக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வருவதாகவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    நாட்டில் வாழும் மொத்த மக்கள்தொகையான 2.6 கோடி மக்களில் 1.7 கோடி பேர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் போதிய ஊட்டச்சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×