என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப்பின் முடிவை அனைத்து வகையிலும் எதிர்ப்பேன்: மலேசிய பிரதமர் அறிவிப்பு
Byமாலை மலர்22 Dec 2017 1:57 PM GMT (Updated: 22 Dec 2017 1:57 PM GMT)
ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவேன் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்:
ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து அனைத்து வகையிலும் போராடுவேன் என மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசியா நாட்டின் நிர்வாக தலைநகரான புட்ரஜயா நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக், ’நமது மதத்தை உயர்த்தி பிடித்து பாதுகாக்க வேண்டியது நமது முதல் கடமையாகும். ஜெருசலேம் இஸ்லாமியர்களின் புனித பூமி என்றால் அதை யூதர்களிடம் இருந்து நாம் விடுவித்தாக வேண்டும்.
பாலஸ்தீன மக்களுக்கு ஜெருசலேம் சொந்தமாகும் வரை அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர முறையிலும், விவாதங்கள் மற்றும் பிரார்த்தனை மூலமாகவும் இதற்காக அனைத்து வகையிலும் போராடுவேன். டிரம்ப்புடன் நட்பு பாராட்டுவதற்காக இஸ்லாமின் புனிதத்தை நான் தியாகம் செய்துவிட முடியாது’ என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X