என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹோண்டுராஸ்: ஹெலிகாப்டர் விபத்தில் அதிபரின் சகோதரி உள்பட 6 பேர் பலி
Byமாலை மலர்17 Dec 2017 4:46 AM GMT (Updated: 17 Dec 2017 4:46 AM GMT)
ஹோண்டுராஸ் நாட்டின் அதிபர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸின் சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ் உள்பட 6 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
டெகுசிகல்பா:
வட அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் அதிபராக இருப்பவர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ். சமீபத்தில் நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் எதிர்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே சிறிய வாக்கு வித்தியாசம் நிலவியது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அதிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஆர்லேண்டோ அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இவரது சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ், அதிபருக்கு நெருங்கிய ஆலோசகராக இருந்தவர். அதற்கு முன்பு அரசின் தொலைத்தொடர்பு துறை செயலாளர் பதவியிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒன்றில் டான்கான்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோமயாகுவா நோக்கி ஹில்டா பயணித்துள்ளார். இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ஹில்டா மற்றும் அவருடன் பயணித்த 5 பேரும் பலியாகினர்.
பலியானவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
வட அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் அதிபராக இருப்பவர் ஆர்லேண்டோ ஹெர்னாண்டஸ். சமீபத்தில் நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் எதிர்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே சிறிய வாக்கு வித்தியாசம் நிலவியது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அதிபர் வெற்றி பெற்றதாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஆர்லேண்டோ அதிபராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இவரது சகோதரி ஹில்டா ஹெர்னாண்டஸ், அதிபருக்கு நெருங்கிய ஆலோசகராக இருந்தவர். அதற்கு முன்பு அரசின் தொலைத்தொடர்பு துறை செயலாளர் பதவியிலும் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் ஒன்றில் டான்கான்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோமயாகுவா நோக்கி ஹில்டா பயணித்துள்ளார். இந்நிலையில், திடீரென ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ஹில்டா மற்றும் அவருடன் பயணித்த 5 பேரும் பலியாகினர்.
பலியானவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X