என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் பலி
Byமாலை மலர்14 Dec 2017 10:24 PM GMT (Updated: 14 Dec 2017 10:24 PM GMT)
பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளி மாணவர்கள் தினமும் பஸ்சில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. பயர்னீஸ் பகுதியில் வரும்போது அங்கிருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பள்ளி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் பள்ளி பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
தெற்கு பிரான்சின் மிலாஸ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை பள்ளி மாணவர்கள் தினமும் பஸ்சில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து வந்து கொண்டிருந்தது. பயர்னீஸ் பகுதியில் வரும்போது அங்கிருந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் பள்ளி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X