என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளி சீக்கியர் நியமனம்
Byமாலை மலர்13 Dec 2017 1:58 PM GMT (Updated: 13 Dec 2017 1:58 PM GMT)
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளி சீக்கியரான குர்பிர் எஸ் கிரேவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநில அரசின் தலைமை வழக்கறிஞராக இந்திய வம்சாவளி சீக்கியரான குர்பிர் எஸ் கிரேவால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றும் இந்திய வம்சாவளி நபர் என்ற சிறப்பிடத்தை இவர் பெற்றுள்ளார்.
முன்னதாக, கடந்த 2004-2007-ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தின் உதவி தலைமை வழக்கறிஞராகவும், 2010-2016 வரை நியூ ஜெர்சி மாநிலத்தின் உதவி தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த குர்பிர் எஸ் கிரேவால் நியூ ஜெர்சி மாநிலத்தின் புதிய தலைமை வழக்கறிஞராக (அட்டார்னி ஜெனரல்) நியமித்து நியூ ஜெர்சி மாநில கவர்னர் பில் மர்பி நேற்று உத்தரவிட்டார்.
நியூ ஜெர்சி ஆசிய பசிபிக் அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினராகவும் உள்ள குர்பிர் எஸ் கிரேவாலின் புதிய பணி நியமனத்துக்கு தெற்காசிய வழக்கறிஞர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X