என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
Byமாலை மலர்13 Dec 2017 12:25 PM GMT (Updated: 13 Dec 2017 12:25 PM GMT)
அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் கையொப்பமிட்டார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையொப்பமிட்டார். மேற்படி தொகையில் 626 பில்லியன் டாலர்களை ராணுவத்தின் அடிப்படை மற்றும் தேசிய பாதுகாப்பு செலவினங்களுக்காகவும், 66 பில்லியன் டாலர்களை கடல்கடந்து பணியாற்றும் அமெரிக்க படைகளில் செயல்பாடுகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 26.2 பில்லியன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும், போர் கப்பல் கட்டவும், 10.1 பில்லியன் 90 நவீனரக போர் விமானங்கள் வாங்கவும், 2.2 பில்லியன் ராணுவத்துக்கான இதர போர் வாகனங்களை வாங்கவும் ஒதுக்கப்படும்.
இந்த பட்ஜெட்டின் மூலம் தெற்காசிய கண்டத்தில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு பாராளுமன்றத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் ராணுவ பட்ஜெட்டில் மிகப்பெரிய வெட்டுகள் விழுந்ததால் நமது படைகளின் தயார்நிலை மற்றும் திறனில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பெருந்தொகையை ஒதுக்குவதுடன் மூலம் அமெரிக்காவின் ராணுவத்தின் வல்லமையை முழுமையாக நிலநாட்ட முடியும். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் போரிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஈராக்கில் வெற்றி பெற்றுள்ளோம். அவர்கள் மற்ற பகுதிகளில் பரவினர். அவர்கள் பரவும் அதே வேகத்தில் நாமும் வீழ்த்தி வருகிறோம்.
கடந்த ஆட்சியாளர்களின் காலம் முழுவதும் பெற்ற வெற்றியைவிட ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் நாம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம் என இந்த நிதியை ஒதுக்கி கையொப்பமிட்ட பின்னர் பேசிய டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்டுக்கு 692 பில்லியன் டாலர்களை ஒதுக்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று கையொப்பமிட்டார். மேற்படி தொகையில் 626 பில்லியன் டாலர்களை ராணுவத்தின் அடிப்படை மற்றும் தேசிய பாதுகாப்பு செலவினங்களுக்காகவும், 66 பில்லியன் டாலர்களை கடல்கடந்து பணியாற்றும் அமெரிக்க படைகளில் செயல்பாடுகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 26.2 பில்லியன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும், போர் கப்பல் கட்டவும், 10.1 பில்லியன் 90 நவீனரக போர் விமானங்கள் வாங்கவும், 2.2 பில்லியன் ராணுவத்துக்கான இதர போர் வாகனங்களை வாங்கவும் ஒதுக்கப்படும்.
இந்த பட்ஜெட்டின் மூலம் தெற்காசிய கண்டத்தில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு பாராளுமன்றத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலத்தில் ராணுவ பட்ஜெட்டில் மிகப்பெரிய வெட்டுகள் விழுந்ததால் நமது படைகளின் தயார்நிலை மற்றும் திறனில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பெருந்தொகையை ஒதுக்குவதுடன் மூலம் அமெரிக்காவின் ராணுவத்தின் வல்லமையை முழுமையாக நிலநாட்ட முடியும். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் போரிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஈராக்கில் வெற்றி பெற்றுள்ளோம். அவர்கள் மற்ற பகுதிகளில் பரவினர். அவர்கள் பரவும் அதே வேகத்தில் நாமும் வீழ்த்தி வருகிறோம்.
கடந்த ஆட்சியாளர்களின் காலம் முழுவதும் பெற்ற வெற்றியைவிட ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் நாம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம் என இந்த நிதியை ஒதுக்கி கையொப்பமிட்ட பின்னர் பேசிய டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X