search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு மீண்டும் அனுமதி: பெண்டகன் அறிவிப்பு
    X

    அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு மீண்டும் அனுமதி: பெண்டகன் அறிவிப்பு

    அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அதிபர் டிரம்ப் முட்டுக்கட்டை போட்ட நிலையில், கோர்ட் உத்தரவால் வரும் ஆண்டு முதல் திருநங்கைகள் சேர்க்கப்படுவார்கள் என பெண்டகன் அறிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்த நிலையில், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு செய்வது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறப்பட்டது.

    “என்னுடைய ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகு அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அரசு அனுமதிக்காது என்பதை பரிந்துரைக்கிறேன். திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது. நன்றி” என டிரம்ப் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

    டிரம்ப் உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினர். நீதிமன்றங்களிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் உள்பட மூன்று நீதிமன்றங்கள் டிரம்ப் அறிவிப்புக்கு தடை விதித்தும், திருநங்கைகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து, வரும் ஜனவரி மாதம் முதல் ராணுவத்தில் திருநங்கைகள் வழக்கம் போல தேர்ந்தடுக்க படுவார்கள் என ராணுவ தலைமையகமான பெண்டகன் அறிவித்துள்ளது.
    Next Story
    ×