search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் முற்றிலும் வீழ்த்தப்பட்டதாக கருதவில்லை: பிரிட்டன் பிரதமர்
    X

    ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் முற்றிலும் வீழ்த்தப்பட்டதாக கருதவில்லை: பிரிட்டன் பிரதமர்

    ஈராக்கில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக தான் கருதவில்லை என்றும், ஈராக் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் எனவும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.
    லண்டன்:

    சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தபோது ஈராக்கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாகவும், தலைமை பீடமாகவும்  அறிவித்து, இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பெயரில் ஆட்சிசெய்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா கை கொடுத்தது. அமெரிக்க விமானப் படையின் உதவியுடன ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மோசூல் நகரம் சமீபத்தில் முழுமையாக மீட்கப்பட்டது.

    அதை தொடர்ந்து தீவிரவாதிகள் வசம் இருந்த மேலும் சில நகரங்கள் படிப்படியாக கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் அவர்கள் வசம் இருக்கும் கடைசி நகரமான தல் அபர் பகுதியை மீட்க தாக்குதல் நடத்துமாறு ஈராக் ராணுவத்துக்கு அந்நாட்டி பிரதமர் ஹைதர் அல்-அபாடி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து, முன்னதாக மீட்கப்பட்ட மோசூல் நகரில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தல் அபர் நகருக்குள் ராணுவ டாங்கிகளுடன் ஏராளமான வீரர்கள் புகுந்தனர்.

    இந்நிலையில், ஈராக் நாட்டை ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்து முழுமையாக மீட்டு விட்டதாகவும், தீவிரவாதிகளின் பிடியில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதாகவும், சிரியா - ஈராக் எல்லையோரத்தில் இருந்து அவர்கள் ஒழிக்கப்பட்டதாகவும் ஈராக் பிரதமர் ஹைடர் அல்-அபாடி நேற்று முன்தினம் அறிவித்தார்.

    ஈரான் அரசுப்படைகளின் செயல்பாட்டுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, “ஐ.எஸ் இயக்கத்தை கட்டுப்படுத்த உலகளாவிய கூட்டணியில் பிரிட்டன் இருந்தது என்பதை பெருமையாக கருதுகிறேன். ஈராக் உடன் தோளோடு தோள் கொடுத்து பிரிட்டன் உதவியது. இருப்பினும், அவர்கள் (ஐ.எஸ்) முழுவதுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக நான் கருதவில்லை. அவர்கள் இன்னும் ஈராக் நாட்டுக்கு அச்சுறுத்தல் தான்” என்று பேசியுள்ளார்.

    ஈராக் கூட்டுப்படையில் பிரிட்டன் விமானம் மட்டும் 1350 வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. மேலும், 60 ஆயிரம் ஈராக் படையினருக்கு பிரிட்டன் பயிற்சி அளித்துள்ளது.
    Next Story
    ×