search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு
    X

    தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு

    துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    அங்காரா:

    துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 12:49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது. முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கந்திலி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்றுதிரண்டனர். அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த புதன்கிழமை முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவாக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×