என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசம்: போர் குற்ற வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
Byமாலை மலர்22 Nov 2017 10:43 AM GMT (Updated: 22 Nov 2017 10:43 AM GMT)
வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி 6 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு குற்ற வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜமாத் இ இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த 6 பேர் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்கள் பலியாக காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் 6 பேருக்கும் மரண தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வங்காளதேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜமாத் இ இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த 6 பேர் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்கள் பலியாக காரணமாக இருந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் 6 பேருக்கும் மரண தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X