என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகில் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிப்பு: அதிகாரி அதிர்ச்சி தகவல்
Byமாலை மலர்21 Nov 2017 3:58 AM GMT (Updated: 21 Nov 2017 3:59 AM GMT)
உலகில் 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுவதாக துபாயில் தொடங்கிய சர்வதேச குழந்தைகள் தின மாநாட்டில் அதிகாரி அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
துபாய்:
சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பு சார்பில் அரபு நாடுகளின் பிராந்தியத்தில் 5-வது சர்வதேச குழந்தைகள் தின மாநாடு துபாயில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைல் முகம்மது தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினமானது ‘சட்டத்தில் இருந்து செயல்பாடு வரை’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. அரபு நாடுகள் எவ்வாறு தங்கள் நாடுகளில் குழந்தைகள் வன்கொடுமையை தடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்துள்ளது? என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த நாளானது கடந்த 1989-ம் ஆண்டு ஐ.நா. சபையானது குழந்தைகள் உரிமைகள் குறித்து முதன்முறையாக ஒரு மாநாட்டை நடத்திய நாளாகும். எனவே இந்த நாளை ஆண்டுதோறும் சர்வதேச அளவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். உலகம் எதிர்கொள்கின்ற சவால்களில் மிக முக்கியமானது குழந்தைகள் மீதான வன்முறையாகும்.
குழந்தைகள் வெளியில் இருந்து மட்டுமல்ல. தாங்கள் வசிக்கும் வீடுகளில் பெற்றோருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என தன் சுற்று வட்டாரத்திலேயே வன்முறையை எதிர்கொள்ளும் கொடுமைகள் நிகழ்கிறது. உலகில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அந்த குழந்தைகள் வன்கொடுமையால் உயிரிழக்கும் பரிதாபமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த மாநாட்டின் நோக்கமானது உலக அளவில் குழந்தைகளுக்கான உரிமைகளை பாதுகாத்து அவர்கள் மீதான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாடு நாளை (புதன்கிழமை) வரை நடக்கிறது.
சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பு சார்பில் அரபு நாடுகளின் பிராந்தியத்தில் 5-வது சர்வதேச குழந்தைகள் தின மாநாடு துபாயில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சர்வதேச குழந்தைகள் வன்முறை மற்றும் புறக்கணிப்புக்கு எதிரான அமைப்பின் தலைவர் டாக்டர் துபைல் முகம்மது தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினமானது ‘சட்டத்தில் இருந்து செயல்பாடு வரை’ என்ற கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. அரபு நாடுகள் எவ்வாறு தங்கள் நாடுகளில் குழந்தைகள் வன்கொடுமையை தடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்துள்ளது? என்பதை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த நாளானது கடந்த 1989-ம் ஆண்டு ஐ.நா. சபையானது குழந்தைகள் உரிமைகள் குறித்து முதன்முறையாக ஒரு மாநாட்டை நடத்திய நாளாகும். எனவே இந்த நாளை ஆண்டுதோறும் சர்வதேச அளவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். உலகம் எதிர்கொள்கின்ற சவால்களில் மிக முக்கியமானது குழந்தைகள் மீதான வன்முறையாகும்.
குழந்தைகள் வெளியில் இருந்து மட்டுமல்ல. தாங்கள் வசிக்கும் வீடுகளில் பெற்றோருக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என தன் சுற்று வட்டாரத்திலேயே வன்முறையை எதிர்கொள்ளும் கொடுமைகள் நிகழ்கிறது. உலகில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒரு குழந்தை வன்முறையால் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் அந்த குழந்தைகள் வன்கொடுமையால் உயிரிழக்கும் பரிதாபமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த மாநாட்டின் நோக்கமானது உலக அளவில் குழந்தைகளுக்கான உரிமைகளை பாதுகாத்து அவர்கள் மீதான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்கும் வழிமுறைகள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மாநாடு நாளை (புதன்கிழமை) வரை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X