என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்ரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் - உரிய விசாரணை கோரும் இந்தியா
Byமாலை மலர்20 Nov 2017 3:41 AM GMT (Updated: 20 Nov 2017 3:41 AM GMT)
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரக உயரதிகாரி சஷாங் விக்ரம், அங்குள்ள வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.
டர்பன்:
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இதில், சஷாங் மனோகர் என்பவர் தூதரக அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மனோகர், அவரது ஐந்து வயது மகன், பணியாளர் மற்றும் மகனின் ஆசிரியர் ஆகிய நான்கு பேரை அங்குள்ள வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும், ஆயுத முனையில் நால்வரையும் சிறைபிடித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து தென் ஆப்ரிக்க வெளியுறவு துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக சஷாங் மனோகரிடம் பேசியதாகவும், அவரது குடும்பத்தினர் நலன் குறித்து உறுதியளித்ததாகவும் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இதில், சஷாங் மனோகர் என்பவர் தூதரக அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மனோகர், அவரது ஐந்து வயது மகன், பணியாளர் மற்றும் மகனின் ஆசிரியர் ஆகிய நான்கு பேரை அங்குள்ள வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும், ஆயுத முனையில் நால்வரையும் சிறைபிடித்துள்ளது.
இவ்விவகாரம் குறித்து தென் ஆப்ரிக்க வெளியுறவு துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக சஷாங் மனோகரிடம் பேசியதாகவும், அவரது குடும்பத்தினர் நலன் குறித்து உறுதியளித்ததாகவும் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X