என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வளிமண்டலத்துடன் பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்16 Nov 2017 11:06 AM GMT (Updated: 16 Nov 2017 11:07 AM GMT)
விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக பூமியை போன்ற ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது.
இப்புதிய கிரகத்தை அமெரிக்காவின் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையம் என்ற கிரகங்களை ஆய்வு செய்யும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ராஸ் 128 ஸ்டார் என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் விசேஷம் என்னவென்றால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியைவிட 1.38 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 11 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது.
இது சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகம் அதன் வளிமண்டலத்தில் அமைந்துள்ள ஒரே கோளாகும். மேலும் அதன் வளிமண்டலத்தின் சூரியனுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது பற்றிய ஆய்வு நடக்கிறது.
இந்தாண்டு மட்டும் பூமியை போன்று மனிதர்கள் வாழக்கூடிய ஏழு கோள்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. இதுவரை சுமார் 24க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X