என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு தூதரை நியமித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
Byமாலை மலர்15 Nov 2017 6:12 AM GMT (Updated: 15 Nov 2017 6:12 AM GMT)
ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பீஜிங்:
சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நீடித்துக்கொண்டே வருகிறது.
ஏவுகணை சோதனைகளால் கடுப்படைந்த அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் வடகொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறியபடியே உள்ளது. வடகொரியாவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவாக இருந்து வரும் நிலையில், இரு நாடுகளையும் வடகொரியாவிடம் இருந்து விலக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்காவின் அதீத அழுத்தம் காரணமாக வடகொரியாவுடன் உள்ள வணிக உறவை சீனா மற்றும் ரஷ்யா குறைத்துக்கொண்டுள்ளன. இதற்கிடையே, வடகொரியா விவகாரத்தை தூதரக ரீதியில் பேசி தீர்க்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூத்த வெளியுறவு துறை அதிகாரி சோங் டாவ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வடகொரியா செல்ல உள்ள சோங் டாவ் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர் பதற்றத்தை தணித்து சுமூக நிலையை கொண்டுவர முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுக்கு எதிராக மேற்கண்ட நாடுகளை அணி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நீடித்துக்கொண்டே வருகிறது.
ஏவுகணை சோதனைகளால் கடுப்படைந்த அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் வடகொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறியபடியே உள்ளது. வடகொரியாவுக்கு சீனா மற்றும் ரஷ்யா ஆதரவாக இருந்து வரும் நிலையில், இரு நாடுகளையும் வடகொரியாவிடம் இருந்து விலக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்காவின் அதீத அழுத்தம் காரணமாக வடகொரியாவுடன் உள்ள வணிக உறவை சீனா மற்றும் ரஷ்யா குறைத்துக்கொண்டுள்ளன. இதற்கிடையே, வடகொரியா விவகாரத்தை தூதரக ரீதியில் பேசி தீர்க்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி, வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூத்த வெளியுறவு துறை அதிகாரி சோங் டாவ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை வடகொரியா செல்ல உள்ள சோங் டாவ் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போர் பதற்றத்தை தணித்து சுமூக நிலையை கொண்டுவர முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரியாவுக்கு எதிராக மேற்கண்ட நாடுகளை அணி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X