என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா: அரசுப்படையினரின் வான்வெளி தாக்குதலில் பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு
Byமாலை மலர்14 Nov 2017 11:27 AM GMT (Updated: 14 Nov 2017 11:27 AM GMT)
சிரியாவின் அலிப்போ மாகாணத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பெய்ரூத்:
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் இணைந்து போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள அல்-அடாரெப் நகரில் நேற்றிரவு ஒரு மார்கெட்டை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று வான்வழி தாக்குதலுல் 61 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா? அல்லது ரஷிய படை நடத்தியதா? என்பது தெரியவில்லை.
இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி இப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் இணைந்து போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள அல்-அடாரெப் நகரில் நேற்றிரவு ஒரு மார்கெட்டை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று வான்வழி தாக்குதலுல் 61 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா? அல்லது ரஷிய படை நடத்தியதா? என்பது தெரியவில்லை.
இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 1-ம் தேதி இப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X