என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: சோதனைச் சாவடிகள் மீது தலிபான்கள் ஆவேச தாக்குதல் - 67 பேர் பலி
Byமாலை மலர்14 Nov 2017 10:08 AM GMT (Updated: 14 Nov 2017 10:08 AM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் 15 சோதனைச் சாவடிகளின் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 22 போலீசார் உயிரிழந்தனர். 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் உள்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவமும் செயலாற்றி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மேவான்ட் மற்றும் சாரி மாவட்டங்களில் உள்ள 15 சோதனைச் சாவடிகளின்மீது நேற்றிரவு தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 22 போலீசார் பலியாகினர். 15 போலீசார் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தவந்த தீவிரவாதிகளில் 45 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், காயங்களுடன் 35 பேர் பிடிபட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் உள்நாட்டு ராணுவத்துடன் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு ராணுவமும் செயலாற்றி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட மேவான்ட் மற்றும் சாரி மாவட்டங்களில் உள்ள 15 சோதனைச் சாவடிகளின்மீது நேற்றிரவு தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 22 போலீசார் பலியாகினர். 15 போலீசார் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தவந்த தீவிரவாதிகளில் 45 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், காயங்களுடன் 35 பேர் பிடிபட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X