என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 55 இந்திய மீனவர்களை சிறைபிடித்தது பாக். கடற்படை
Byமாலை மலர்11 Nov 2017 9:54 AM GMT (Updated: 11 Nov 2017 9:54 AM GMT)
எல்லைத் தாண்டி மீன் பிடித்த 55 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 9 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை தாண்டி மீன்பிடிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லையில் நேற்று இரவு இந்திய மீனவர்கள் பலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த 55 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும், அவர்களுடன் 9 மீன்பிடி படகுகளையும் கைப்பற்றி சிறை வைத்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் கடற்படையினரால் 79 இந்திய மீனவர்கள் மற்றும் 13 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X