என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியா: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த மேலும் ஒரு முக்கிய நகரை அரசுப் படைகள் கைப்பற்றின
Byமாலை மலர்3 Nov 2017 11:25 AM GMT (Updated: 3 Nov 2017 11:25 AM GMT)
சிரியா நாட்டின் கிழக்கே யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையோரத்தில் உள்ள டேய்ர் எல் ஸோர் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் உச்சகட்டப் போரில் சிரியா படைகள் ஈடுபட்டு வந்தன.
டமாஸ்கஸ்:
சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது. அரசுக்கு ஆதரவான குர்த் படைகளும் இந்த போரில் குதித்தன.
இதுதவிர, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அங்கு போராளிகள் பிடியில் இருக்கும் முக்கிய பகுதிகளை கைப்பற்றவும் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சிரியா நாட்டின் கிழக்கே யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையோரத்தில் உள்ள டேய்ர் எல் ஸோர் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் உச்சகட்டப் போரில் சிரியா படைகள் ஈடுபட்டு வந்தன. இதன் விளைவாக டேய்ர் எல் ஸோர் நகரம் முழுவதையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாக சிரியா ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
எண்ணைவளம் மிக்க டேய்ர் எல் ஸோர் மாகாணத்தின் கிழக்கு பகுதியை கைப்பற்றுவதற்காக ராணுவம் முன்னேறி வருவதாக அந்த செய்திகள் குறிப்பிட்டன.
சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்துகின்றது. அரசுக்கு ஆதரவான குர்த் படைகளும் இந்த போரில் குதித்தன.
இதுதவிர, சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். அங்கு போராளிகள் பிடியில் இருக்கும் முக்கிய பகுதிகளை கைப்பற்றவும் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சிரியா நாட்டின் கிழக்கே யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையோரத்தில் உள்ள டேய்ர் எல் ஸோர் நகரை ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கும் உச்சகட்டப் போரில் சிரியா படைகள் ஈடுபட்டு வந்தன. இதன் விளைவாக டேய்ர் எல் ஸோர் நகரம் முழுவதையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாக சிரியா ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
எண்ணைவளம் மிக்க டேய்ர் எல் ஸோர் மாகாணத்தின் கிழக்கு பகுதியை கைப்பற்றுவதற்காக ராணுவம் முன்னேறி வருவதாக அந்த செய்திகள் குறிப்பிட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X