search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்: துருக்கி ராணுவம் - குர்து போராளிகள் மோதலில் 8 பேர் பலி
    X

    ஈராக்: துருக்கி ராணுவம் - குர்து போராளிகள் மோதலில் 8 பேர் பலி

    ஈராக் நாட்டின் வடகிழக்கு பகுதியில் குர்து போராளிகள் மற்றும் துருக்கி ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் வடகிழக்கு பகுதியில் குர்து போராளிகள் மற்றும் துருக்கி ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈராக் நாட்டின் குர்து மக்கள் அதிகமுள்ள பகுதியான வடகிழக்கு பகுதிகளில் குர்து தொழிலாளர் கட்சியின் போராளிகளை தேடும் பணியில் துருக்கி ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அப்போது, துருக்கி ராணுவத்தினருக்கும் குர்து போராளிகளுக்கும் இடையே சண்டை வெடித்தது.

    சில மணி நேரங்கள் நீடித்த இந்த சண்டையில் துருக்கி ராணுவத்தினர் 4 பேரும், குர்து போராளிகள் நான்கு பேரும் பலியாகினர். ஈராக்கிலிருந்து குர்து பகுதியை பிரிக்க வேண்டும் என ஆயுதம் தாங்கிய இயக்கமாக செயல்பட்டு வரும் குர்து தொழிலாளர் கட்சியானது துருக்கியின் ஆதரவுடன் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×