என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலி
Byமாலை மலர்31 Oct 2017 8:37 PM GMT (Updated: 31 Oct 2017 8:38 PM GMT)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபுல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வசிர் அப்கர் கான் பகுதி உள்ளது. இங்கு வெளியுறவு துறை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் எப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இந்நிலையில், இந்த பகுதியில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிமருந்துகளை நிரப்பியபடி இந்த பகுதியில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினான்.
இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை சக போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மே மாதம் காபுலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வசிர் அப்கர் கான் பகுதி உள்ளது. இங்கு வெளியுறவு துறை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் எப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இந்நிலையில், இந்த பகுதியில் நேற்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிமருந்துகளை நிரப்பியபடி இந்த பகுதியில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினான்.
இந்த தாக்குதலில் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை சக போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மே மாதம் காபுலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X