என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி
Byமாலை மலர்30 Oct 2017 12:36 AM GMT (Updated: 30 Oct 2017 12:36 AM GMT)
சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியாத்:
சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. அதன்படி பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே கடற்கரை ஓட்டலில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணியவும், வாகனம் ஓட்டவும் மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பட இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ரியாத், தம்மான், ஜித்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களுக்குள் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட இருப்பதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X