என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் கடும் துப்பாக்கி சண்டை: 8 பயங்கரவாதிகள் பலி
Byமாலை மலர்22 Oct 2017 10:29 PM GMT (Updated: 22 Oct 2017 10:29 PM GMT)
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்க்கும் நிகழ்ந்த கடும் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
கராச்சி:
பாகிஸ்தானில் கராச்சி நகரில், ராயீஸ் கோத் பகுதியில், ஏ.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற அன்சருல் ஷரியா பாகிஸ்தான் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த படையினர், எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து, சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல், மறைவிடத்தில் இருந்து கொண்டு அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே பயங்கரவாத தடுப்பு படையினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு தங்களது துப்பாக்கியால் சரியான பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையின் முடிவில் 5 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியில் 3 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு விட்டனர்.
இந்த சண்டையின்போது பயங்கரவாத தடுப்பு படை வீரர் ஒருவரும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலியான பயங்கரவாதிகளில் அன்சருல் ஷரியா பாகிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஷெகர்யார் என்ற டாக்டர் அப்துல்லா ஹாஸ்மி முக்கியமானவர்.
இந்த துப்பாக்கி சண்டையின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தானில் கராச்சி நகரில், ராயீஸ் கோத் பகுதியில், ஏ.எஸ்.பி. என்று அழைக்கப்படுகிற அன்சருல் ஷரியா பாகிஸ்தான் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த படையினர், எல்லை பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து, சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல், மறைவிடத்தில் இருந்து கொண்டு அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
உடனே பயங்கரவாத தடுப்பு படையினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் அவர்களுக்கு தங்களது துப்பாக்கியால் சரியான பதிலடி கொடுத்தனர். இரு தரப்பிலும் நீண்ட நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையின் முடிவில் 5 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டபோது வழியில் 3 பயங்கரவாதிகள் இறந்தனர். அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு விட்டனர்.
இந்த சண்டையின்போது பயங்கரவாத தடுப்பு படை வீரர் ஒருவரும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பலியான பயங்கரவாதிகளில் அன்சருல் ஷரியா பாகிஸ்தான் இயக்கத்தின் தலைவர் ஷெகர்யார் என்ற டாக்டர் அப்துல்லா ஹாஸ்மி முக்கியமானவர்.
இந்த துப்பாக்கி சண்டையின்போது பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X