என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 முன்னாள் ஜனாதிபதிகள்
Byமாலை மலர்22 Oct 2017 8:33 PM GMT (Updated: 22 Oct 2017 8:33 PM GMT)
புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாக தோன்றினர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. இந்தப் புயல்களால் பெருத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன.
இந்தப் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாக தோன்றினர். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இவர்களில் ஜார்ஜ் டபிள்யு புஷ், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் ஆகிய இருவரும் குடியரசு கட்சியினர். மற்ற 3 பேரும் ஜனநாயக கட்சியினர். பொது நலனுக்காக அவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்தது மக்களை கவர்ந்தது.
‘தி ஒன் அமெரிக்கா அப்பீல்’ என்ற இந்த இசை நிகழ்ச்சி மூலம் இதுவரை 31 மில்லியன் டாலர் (சுமார் ரூ.201 கோடி) வசூலாகி உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக ஒபாமா பதிவு செய்த செய்தி ஒன்றை ஏற்கனவே வெளியிட்டார். அதில் அவர், “முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில், சக அமெரிக்கர்கள் (புயல் பாதிப்பில் இருந்து) மீண்டு வர நாங்கள் உதவ விரும்பினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
5 முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை. இருந்தபோதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தன் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.
அமெரிக்காவை இந்த ஆண்டு ஹார்வே, இர்மா, மரியா புயல்கள் தாக்கி புரட்டிப்போட்டன. இந்தப் புயல்களால் பெருத்த பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டன.
இந்தப் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டித் தருவதற்காக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அங்கு டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ், ஜிம்மி கார்ட்டர் ஆகிய 5 பேரும் மேடையில் ஒன்றாக தோன்றினர். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இவர்களில் ஜார்ஜ் டபிள்யு புஷ், ஜார்ஜ் எச்.டபிள்யு. புஷ் ஆகிய இருவரும் குடியரசு கட்சியினர். மற்ற 3 பேரும் ஜனநாயக கட்சியினர். பொது நலனுக்காக அவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்தது மக்களை கவர்ந்தது.
‘தி ஒன் அமெரிக்கா அப்பீல்’ என்ற இந்த இசை நிகழ்ச்சி மூலம் இதுவரை 31 மில்லியன் டாலர் (சுமார் ரூ.201 கோடி) வசூலாகி உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்காக ஒபாமா பதிவு செய்த செய்தி ஒன்றை ஏற்கனவே வெளியிட்டார். அதில் அவர், “முன்னாள் ஜனாதிபதிகள் என்ற முறையில், சக அமெரிக்கர்கள் (புயல் பாதிப்பில் இருந்து) மீண்டு வர நாங்கள் உதவ விரும்பினோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
5 முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை. இருந்தபோதும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தன் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X