search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியுடன் இருக்கிறோம் - பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி
    X

    சிறுமான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியுடன் இருக்கிறோம் - பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி

    பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அப்பாஸி சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளது என கூறினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு அந்நாட்டு பிரதமர் அப்பாஸி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் உறுதியுடன் உள்ளது என அவர் கூறினார்.

    அப்பாஸி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், “ சிறுபான்மையின மக்களின் நலன்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. சிறுபான்மையின மக்களின் நலனை பாதுகாக்க நபிகளின் புனித கொள்கை எங்களுக்கு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. இந்த தீப திருநாள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவர நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எந்த மதமும் வன்முறையையோ, வெறுப்பையோ கற்றுத் தருவதில்லை. அதுமட்டுமின்றி அனைத்து மதங்களும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் மனிதநேயத்தை அதிகரிக்கவே வலியுறுத்துகின்றன. சாதி, மத பாகுபாட்டில்லா ஒரு சமுதாயத்தை மேம்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றார். 

    பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் மக்களுக்கும் அப்பாஸி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 
    Next Story
    ×