search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு
    X

    பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு

    பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நடவடிக்கை எடுத்தது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப், மகள், மருமகன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நடவடிக்கை எடுத்தது.

    பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

    மேலும், நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு கோர்ட்டான தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்கு தாக்கல் செய்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் மீது ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,

    இந்த வழக்குகளில் அவர்களுக்கு எதிராக கடந்த 13-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்தில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, குற்றச்சாட்டு பதிவு 19-ந் தேதிக்கு (நேற்றைக்கு) ஒத்தி போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதற்கு எதிராக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ்- மருமகன் கேப்டன் முகமது சப்தார் தரப்பிலும், நவாஸ் ஷெரீப் தரப்பிலும் தனித்தனியாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை நீதிபதி முகமது பஷீர் நிராகரித்தார்.

    இதேபோன்று, லண்டன் அடுக்குமாடி வீடுகள், கூடுதல் முதலீடுகள், அல் அஜிஷியா உருக்கு ஆலை ஆகியவை தொடர்பான 3 வழக்குகளையும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக விவாதிக்க அவகாசம் தேவை என்று தேசிய பொறுப்புடைமை அமைப்பின் வக்கீல் கூறினார்.

    அதைத் தொடர்ந்து இந்த வழக்குகளில் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் மீது நீதிபதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். 3 பேர் தரப்பிலும் அந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டன.

    நேற்றைய விசாரணையின் போது நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் முகமது சப்தார் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராகினர். நவாஸ் ஷெரீப் சார்பில் அவரது பிரதிநிதி ஆஜர் ஆனார். 
    Next Story
    ×