என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய பாரம்பரிய முறையில் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
Byமாலை மலர்17 Oct 2017 6:50 AM GMT (Updated: 17 Oct 2017 6:50 AM GMT)
கனடாவில் உள்ள இந்தியர்களுடன் பாரம்பரிய ஆடை அணிந்து பிரதமர் ஜஸ்டின் டுருடோ தீபாவளியை சிறப்பாக கொண்டாடினார்.
ஒட்டாவா:
இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தீபாவளி. அந்நாளில் மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் உண்டும் மகிழ்வர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கனடாவில் உள்ள இந்தியர்கள் ஒட்டாவா நகரில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். அந்த விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ கலந்து கொண்டார். இந்திய பாரம்பரிய முறையில் ஷர்வானி அணிந்திருந்தார். நிகழ்ச்சியில் இந்திய தூதர் விகாஸ் ஸ்வரூப் கலந்து கொண்டார். ஜஸ்டின் அங்கிருந்த குத்து விளக்கை ஏற்றி வைத்தார்.
மேலும், ஜஸ்டின் தனது தீபாவளி வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவு செய்தார். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த அவர், தீபாவளியை ஒட்டாவா நகரில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
அவரின் வாழ்த்துகளுக்கு சமூக ஊடகங்களில் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஜஸ்டின் இது போல் பல இந்திய பண்டிகைகளை கொண்டாடி உள்ளார். பொங்கல் பண்டிகையில் போது ஜஸ்டின் அனைவருக்கும் தமிழில் வாழ்த்துக்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தீபாவளி. அந்நாளில் மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் உண்டும் மகிழ்வர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கனடாவில் உள்ள இந்தியர்கள் ஒட்டாவா நகரில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். அந்த விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ கலந்து கொண்டார். இந்திய பாரம்பரிய முறையில் ஷர்வானி அணிந்திருந்தார். நிகழ்ச்சியில் இந்திய தூதர் விகாஸ் ஸ்வரூப் கலந்து கொண்டார். ஜஸ்டின் அங்கிருந்த குத்து விளக்கை ஏற்றி வைத்தார்.
மேலும், ஜஸ்டின் தனது தீபாவளி வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவு செய்தார். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த அவர், தீபாவளியை ஒட்டாவா நகரில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
அவரின் வாழ்த்துகளுக்கு சமூக ஊடகங்களில் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஜஸ்டின் இது போல் பல இந்திய பண்டிகைகளை கொண்டாடி உள்ளார். பொங்கல் பண்டிகையில் போது ஜஸ்டின் அனைவருக்கும் தமிழில் வாழ்த்துக்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X