search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி - நேபாளம் இடையே நேரடி பஸ் சேவை தொடங்கியது
    X

    டெல்லி - நேபாளம் இடையே நேரடி பஸ் சேவை தொடங்கியது

    நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை புதுடெல்லியுடன் இணைக்கும் வாராந்திர நேரடி பஸ் சேவை இன்று தொடங்கியது.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் ரோப்லா மாவட்டத்தை புதுடெல்லியுடன் இணைக்கும் வாராந்திர நேரடி பஸ் சேவை இன்று தொடங்கியது.

    நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 280 கிலோமீட்டர் மேற்கேயுள்ள ரோப்லா மாவட்டத்தை சேர்ந்த போக்குவரத்து நிறுவனம் இந்திய தலைநகர் டெல்லியை ரோப்லா மாவட்டத்துடன் இணைக்கும் பஸ் சேவையை தொடங்க திட்டமிட்டது.

    இந்த பஸ் புதன்கிழமைகளில் ரோப்லாவில் உள்ள லிவாங் நகரில் இருந்து புறப்பட்டு பியுத்தான், பாலுவாங், நேபாள்கஞ்ச் வழியாக டெல்லி வந்தடையும். எதிர் திசையில் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோப்லாவுக்கு செல்லும் இந்த வாராந்திர பஸ் சேவைக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு.
    Next Story
    ×