என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹபீஸ் சயீத் மீதான நிலைப்பாட்டில் மாற்றம்: வீட்டுக்காவலை விலக்க பாக். அரசு முடிவு
Byமாலை மலர்15 Oct 2017 10:09 AM GMT (Updated: 15 Oct 2017 10:10 AM GMT)
மும்பை தாக்குதலில் மூளையாக இருந்த ஹபீஸ் சயித்-க்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விருப்பம் இல்லை என பாகிஸ்தான் அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட் அனுப்பிய நோட்டீசின்படி, அரசு தரப்பில் போதுமான ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டிய தலைமை வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இஸ்லாமாபாத் நகருக்கு அவர் சென்றுள்ளதால் சற்று அவகாசம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான அவரது உதவியாளர் தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி சையத் மஸாஹர் அலி அக்பர் நக்வி, ‘வெறும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எந்த குடிமகனின் காவலையும் நீட்டிக்க கூடாது’ என எச்சரிக்கை விடுத்தார். மேலும், பலமான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்காவிட்டால் அவரது காவல் நீட்டிப்பை ரத்துசெய்து உத்தரவிட நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத்தவா என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயர் தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
இதற்கு எதிராக லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது ஐகோர்ட் அனுப்பிய நோட்டீசின்படி, அரசு தரப்பில் போதுமான ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டிய தலைமை வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இஸ்லாமாபாத் நகருக்கு அவர் சென்றுள்ளதால் சற்று அவகாசம் அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான அவரது உதவியாளர் தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி சையத் மஸாஹர் அலி அக்பர் நக்வி, ‘வெறும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எந்த குடிமகனின் காவலையும் நீட்டிக்க கூடாது’ என எச்சரிக்கை விடுத்தார். மேலும், பலமான ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்காவிட்டால் அவரது காவல் நீட்டிப்பை ரத்துசெய்து உத்தரவிட நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஹபீஸ் சயீதுக்கான வீட்டுக்காவலை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அந்த உத்தரவை திரும்ப பெறுவதாகவும் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X