என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியட்நாம்: வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
Byமாலை மலர்12 Oct 2017 5:14 AM GMT (Updated: 12 Oct 2017 5:14 AM GMT)
வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹனோய்:
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பலியாகினர்.
மீட்பு பணிகளின்போது மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மீட்புப்படையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், நோயன் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரும், யென்பாய் உள்ளிட்ட பிற மாகாணங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமான 40 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 18,000-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையில் சிக்கி 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் 40,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலவரப்படி வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 15 பலியாகினர்.
மீட்பு பணிகளின்போது மேலும் சிலரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மீட்புப்படையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், நோயன் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரும், யென்பாய் உள்ளிட்ட பிற மாகாணங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி மாயமான 40 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 200 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 18,000-க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 17,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த மழையில் சிக்கி 8,000 ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளது. மேலும் 40,000க்கும் மேற்பட்ட விலங்குகள் மழையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.
வியட்நாமில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X