search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி
    X

    வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

    வியட்நாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    ஹனோய்:

    தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கடுமையாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில்  வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழை மற்றும் வெள்ளச் சேதம் தொடர்பாக அந்நாட்டின் பேரிடர் மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோயன் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரும், யென்பாய் உள்ளிட்ட பிற மாகாணங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமாகியுள்ள 8 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

    வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×