என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியட்நாமில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி
Byமாலை மலர்11 Oct 2017 9:07 PM GMT (Updated: 11 Oct 2017 9:07 PM GMT)
வியட்நாமில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஹனோய்:
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கடுமையாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மழை மற்றும் வெள்ளச் சேதம் தொடர்பாக அந்நாட்டின் பேரிடர் மையம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயன் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேரும், யென்பாய் உள்ளிட்ட பிற மாகாணங்களில் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாயமாகியுள்ள 8 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X