search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலியா: அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி
    X

    சோமாலியா: அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

    சோமாலியா நாட்டின் பண்ட்லந்த் மாகாணத்தில் பொதுமக்கள் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
    மொகடிஷூ:

    சோமாலியா நாட்டில் பண்ட்லந்த் தன்னாட்சி பெற்ற மாகாணமாக உள்ளது. இன்று அதிகாலை போசாசோ நகரில் அல் ஷபாப் நகரில் துப்பாக்கிகளுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

    இதனையடுத்து, போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சண்டையில் 7 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் 7 போலீசார் கொல்லப்பட்டதாக அல் ஷபாப் இயக்கத்தின் தளபதி தெரிவித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாகவே அந்நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்திவரும் அல் ஷபாப் இயக்கத்தினர் ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×