என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்ஸ் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல்
Byமாலை மலர்6 Oct 2017 12:13 AM GMT (Updated: 6 Oct 2017 12:14 AM GMT)
பிலிப்பைன்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோ மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்தது.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோ மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் மரியா லூர்து செரீனோ. இவர் மீது ஊழல், அரசியல் சாசனத்தை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால், அவரை தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மரியா லூர்து செரீனோ மறுத்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கருத்து தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதி மரியா லூர்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தபோது ஒரு குறிப்பிட்ட வழக்கில் வாதாடுவதற்காகப் பெற்ற ஊதியம் குறித்த முழு விவரத்தை வெளியிடவில்லை என்று அதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்ற விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உள்ள 27 உறுப்பினர்களில் 25 பேர் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனையடுத்து, அவர் மீதான புகார் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தவிர, ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரான கொஞ்சிடா மொராலிஸ் மீதும் ஊழல் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. அவரையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவின் இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தலைமை நீதிபதி மீதான புகார்களை முழுமையாக ஆராயாமல் நாடாளுமன்றக் குழு தனது ஒப்புதலை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மரியா லூர்து செரீனோ மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் அளித்தது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் மரியா லூர்து செரீனோ. இவர் மீது ஊழல், அரசியல் சாசனத்தை மீறி செயல்படுதல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால், அவரை தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மரியா லூர்து செரீனோ மறுத்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்குத் தான் முழு ஆதரவு அளிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கருத்து தெரிவித்திருந்தார். தலைமை நீதிபதி மரியா லூர்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தபோது ஒரு குறிப்பிட்ட வழக்கில் வாதாடுவதற்காகப் பெற்ற ஊதியம் குறித்த முழு விவரத்தை வெளியிடவில்லை என்று அதிபர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அந்நாட்டு நீதிமன்ற விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவில் உள்ள 27 உறுப்பினர்களில் 25 பேர் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இரு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனையடுத்து, அவர் மீதான புகார் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தவிர, ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரான கொஞ்சிடா மொராலிஸ் மீதும் ஊழல் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. அவரையும் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இணை நீதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழுவின் இந்த முடிவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. தலைமை நீதிபதி மீதான புகார்களை முழுமையாக ஆராயாமல் நாடாளுமன்றக் குழு தனது ஒப்புதலை வழங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X