என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீதம் குறைக்க வலியுறுத்தும் அமெரிக்கா
Byமாலை மலர்3 Oct 2017 5:09 AM GMT (Updated: 3 Oct 2017 5:09 AM GMT)
வாஷிங்டனில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி வலியுறுத்த அமெரிக்க அரசு தயாராகி வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பகைமையானது ஒபாமா ஆட்சிக்காலத்தில் முடிவுக்கு வந்தது. ஒபாமா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் தூதரகங்கள் திறக்கப்பட்டன. சமீபகாலமாக கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் காது கேளாமை, மூளை பாதிப்பு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது கியூபா அரசின் மறைமுக தாக்குதல் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன், கியூபாவில் உள்ள தூதரகத்தை மூடவும் முடிவு செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை கியூபா மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை குறைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி கேட்டுக்கொள்ள டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பாக அதிபர் டிரம்புடன் வெளியுறவுத்துறை மந்திரி டில்லர்சன் ஆலோசனை நடத்தியுள்ளார். கியூபா தூதரக ஊழியர்களை திரும்ப பெறும்படி கியூபாவிடம் அமெரிக்க அரசு முறைப்படி கேட்டுக்கொள்ளும். கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பகைமையானது ஒபாமா ஆட்சிக்காலத்தில் முடிவுக்கு வந்தது. ஒபாமா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் தூதரகங்கள் திறக்கப்பட்டன. சமீபகாலமாக கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் காது கேளாமை, மூளை பாதிப்பு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது கியூபா அரசின் மறைமுக தாக்குதல் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன், கியூபாவில் உள்ள தூதரகத்தை மூடவும் முடிவு செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை கியூபா மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை குறைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி கேட்டுக்கொள்ள டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பாக அதிபர் டிரம்புடன் வெளியுறவுத்துறை மந்திரி டில்லர்சன் ஆலோசனை நடத்தியுள்ளார். கியூபா தூதரக ஊழியர்களை திரும்ப பெறும்படி கியூபாவிடம் அமெரிக்க அரசு முறைப்படி கேட்டுக்கொள்ளும். கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X