என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்தும் டிரம்ப் ஆலோசகர்கள் - பரபரப்பு தகவல்கள்
Byமாலை மலர்26 Sep 2017 4:13 AM GMT (Updated: 26 Sep 2017 4:13 AM GMT)
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆலோசகர்கள் அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த போது உள்துறை செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டன் அரசுப்பணிகளுக்காக தனிப்பட்ட இ-மெயிலை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட்டபோது முக்கிய விவாதமாக இந்த இ-மெயில் விவகாரம் இடம் பிடித்தது.
ஹிலாரியின் தோல்விக்கு இந்த விவகாரம் முக்கிய காரணம் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போதைய அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களாக இருக்கும் 6 பேர் அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக இருந்த ரெய்ன்ஸ் மற்றும் முன்னாள் திட்டமிடல் குழு தலைவர் ஸ்டீவ் பன்னான் ஆகியோர் முக்கிய அரசுப்பணிகளை தங்களுடைய சொந்த இ-மெயிலை பயன்படுத்தி செய்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப்பின் மருமகன் குஷ்னரும் வெள்ளை மாளிகையின் முக்கிய கோப்புகளை தனது இ-மெயில் மூலம் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து குடியரசுக்கட்சியினர் எவ்வித கருத்துக்களையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த போது உள்துறை செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டன் அரசுப்பணிகளுக்காக தனிப்பட்ட இ-மெயிலை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, கடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட்டபோது முக்கிய விவாதமாக இந்த இ-மெயில் விவகாரம் இடம் பிடித்தது.
ஹிலாரியின் தோல்விக்கு இந்த விவகாரம் முக்கிய காரணம் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போதைய அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களாக இருக்கும் 6 பேர் அரசுப்பணிகளுக்காக சொந்த இ-மெயிலை பயன்படுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளராக இருந்த ரெய்ன்ஸ் மற்றும் முன்னாள் திட்டமிடல் குழு தலைவர் ஸ்டீவ் பன்னான் ஆகியோர் முக்கிய அரசுப்பணிகளை தங்களுடைய சொந்த இ-மெயிலை பயன்படுத்தி செய்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிரம்ப்பின் மருமகன் குஷ்னரும் வெள்ளை மாளிகையின் முக்கிய கோப்புகளை தனது இ-மெயில் மூலம் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து குடியரசுக்கட்சியினர் எவ்வித கருத்துக்களையும் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X