என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் தேர்வு
Byமாலை மலர்24 Sep 2017 11:42 PM GMT (Updated: 24 Sep 2017 11:42 PM GMT)
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வெலிங்டன்:
119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது.
இந்த தேர்தலில், டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆவார். இவர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
டாக்டர் பரம்ஜீத் பார்மர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
பிரியங்கா ராதாகிருஷ்ணன் (வயது 38), தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணிக் கட்சியான பசுமைக்கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்வல்ஜீத் சிங் பாக்சி, டெல்லியில் பிறந்தவர். பிரியங்கா ராதாகிருஷ்ணன், கேரள மாநிலம், பரவூரை சேர்ந்தவர்.
119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. உடனடியாக ஓட்டு எண்ணிக்கையும் முடிந்து விட்டது. இந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது.
இந்த தேர்தலில், டாக்டர் பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆவார். இவர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
டாக்டர் பரம்ஜீத் பார்மர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
பிரியங்கா ராதாகிருஷ்ணன் (வயது 38), தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணிக் கட்சியான பசுமைக்கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்வல்ஜீத் சிங் பாக்சி, டெல்லியில் பிறந்தவர். பிரியங்கா ராதாகிருஷ்ணன், கேரள மாநிலம், பரவூரை சேர்ந்தவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X