என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கையில் மணப்பெண் உடுத்திய 3 கி.மீ. நீள சேலை: பள்ளி குழந்தைகளை பயன்படுத்தியதால் சர்ச்சை
Byமாலை மலர்23 Sep 2017 5:48 AM GMT (Updated: 23 Sep 2017 5:48 AM GMT)
இலங்கையில் மணப்பெண் உடுத்திய 3 கி.மீ. நீள சேலையை தூக்கி பிடித்தபடி செல்ல பள்ளி குழந்தைகளை பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொழும்பு:
இலங்கையில் உள்ள கண்டியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் மணப்பெண் அணியும் சேலை கின்னஸ் சாதனை படைக்க 3.2 கி.மீட்டர் நீளத்துக்கு தயாரிக்கப்பட்டது.
திருமணத்தன்று மணப்பெண் அந்த சேலையை உடுத்தியிருந்தார். அது போக சேலையின் மீதி பகுதியை தூக்கி பிடித்தபடி செல்ல அரசு பள்ளியில் படிக்கும் 250 பள்ளி குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.
அவர்கள் கண்டி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது மணப்பெண் அணிந்த 3 கி.மீட்டர் நீள சேலை தரையில் படாதபடி தூக்கி பிடித்தபடி நடந்து சென்றனர். மணமக்களுக்கு மலர் தூவ மேலும் 100 குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண் அணிந்த மிக நீளமான சேலையை தூக்கி பிடித்திருக்கும் பள்ளி குழந்தைகளை படத்தில் காணலாம்
இந்த திருமண விழாவில் மத்திய மாகாண முதல்- மந்திரி சரத் ஏகநாயகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மணப்பெண்ணின் சேலையை தூக்கி பிடித்தபடி செல்ல பள்ளி குழந்தைகளை பயன்படுத்தியது குற்றம் என குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும் அது அவர்களின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்துக்கு பாதகம் விளைவிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளது.
எனவே இச்சம்பவம் குறித்து மணமகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள கண்டியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் மணப்பெண் அணியும் சேலை கின்னஸ் சாதனை படைக்க 3.2 கி.மீட்டர் நீளத்துக்கு தயாரிக்கப்பட்டது.
திருமணத்தன்று மணப்பெண் அந்த சேலையை உடுத்தியிருந்தார். அது போக சேலையின் மீதி பகுதியை தூக்கி பிடித்தபடி செல்ல அரசு பள்ளியில் படிக்கும் 250 பள்ளி குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.
அவர்கள் கண்டி மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது மணப்பெண் அணிந்த 3 கி.மீட்டர் நீள சேலை தரையில் படாதபடி தூக்கி பிடித்தபடி நடந்து சென்றனர். மணமக்களுக்கு மலர் தூவ மேலும் 100 குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பெண் அணிந்த மிக நீளமான சேலையை தூக்கி பிடித்திருக்கும் பள்ளி குழந்தைகளை படத்தில் காணலாம்
இந்த திருமண விழாவில் மத்திய மாகாண முதல்- மந்திரி சரத் ஏகநாயகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மணப்பெண்ணின் சேலையை தூக்கி பிடித்தபடி செல்ல பள்ளி குழந்தைகளை பயன்படுத்தியது குற்றம் என குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும் அது அவர்களின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்துக்கு பாதகம் விளைவிக்கும் செயல் என குற்றம் சாட்டியுள்ளது.
எனவே இச்சம்பவம் குறித்து மணமகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X