என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் பாலி தீவில் எரிமலை வெடிக்கும் அபாயம்
Byமாலை மலர்23 Sep 2017 5:26 AM GMT (Updated: 23 Sep 2017 5:27 AM GMT)
இந்தோனேசியாவில் பாலி தீவில் ஆகங் என்ற எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இறுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகங் எரிமலையை சுற்றி 9 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருக்கும் பொது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியேறாதவர்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் எரிமலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலி தீவில் உள்ள தென்பசார் சர்வதேச விமான நிலையமாகும். இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இறுதியாக கடந்த 1963-ம் ஆண்டு வெடித்தது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இது மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. இப்போதே அதில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகங் எரிமலையை சுற்றி 9 கி.மீட்டர் தூரத்தில் தங்கியிருக்கும் பொது மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியேறாதவர்கள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் எரிமலை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலி தீவில் உள்ள தென்பசார் சர்வதேச விமான நிலையமாகும். இங்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். தற்போது குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X