என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி
Byமாலை மலர்21 Sep 2017 6:40 AM GMT (Updated: 21 Sep 2017 6:40 AM GMT)
நியூசிலாந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய ஒருவர், திடீரென தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெல்லிங்டன்:
நியூசிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வெளியே தீப்பிடித்து புகை வந்துள்ளது. அதனை கண்ட அனைவரும் தண்ணீரை ஊற்றி அணைக்க அருகில் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உடனே அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர்.
தீக்காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வேறு வழியாக வெளியேற்றப்பட்டனர்.
பாராளுமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர், அங்கு போராட்டம் நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர் யார் என்பது அடையாளம் கண்டறியப்படவில்லை. அவர் தீக்குளித்த இடத்தில் கோரிக்கைகள் அடங்கிய பேனர்கள் கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நியூசிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வெளியே தீப்பிடித்து புகை வந்துள்ளது. அதனை கண்ட அனைவரும் தண்ணீரை ஊற்றி அணைக்க அருகில் சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத நபர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. உடனே அனைவரும் சேர்ந்து தீயை அணைத்தனர்.
தீக்காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வேறு வழியாக வெளியேற்றப்பட்டனர்.
பாராளுமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர், அங்கு போராட்டம் நடத்தியவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அவர் யார் என்பது அடையாளம் கண்டறியப்படவில்லை. அவர் தீக்குளித்த இடத்தில் கோரிக்கைகள் அடங்கிய பேனர்கள் கிடந்தன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X