search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரானில் சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு
    X

    ஈரானில் சிறுமியை கற்பழித்து கொன்றவனுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு

    ஈரானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்றவனை நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டனர். இந்த காட்சிகளை பொதுமக்கள் படம் பிடித்து இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
    பாக்தாத்:

    ஈரானில் உள்ள அர்டேபிள் பிராந்தியத்தில் 7 வயது சிறுமியை இஸ்மாயில் ஜபர்சேத் (வயது 42) என்பவன் கற்பழித்து கொலை செய்தான். இது சம்மந்தமான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது.

    அவனை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போடும்படி ஈரான் கோர்ட்டு உத்தரவிட்டது. அவனை பர்சாபாத் என்ற இடத்தில் உள்ள சதுக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட ஏற்பாடு செய்யப்பட்டது.

    முகத்தை மூடி அவனை அழைத்து வந்து மக்கள் கூட்டத்தின் மத்தியில் தூக்கிலிட்டனர். அப்போது பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

    இந்த காட்சிகளை படம் பிடித்து இணையதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
    Next Story
    ×