என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசம்: ஜவுளி ஆலை தீ விபத்தில் 6 பேர் பலி
Byமாலை மலர்20 Sep 2017 1:30 PM GMT (Updated: 20 Sep 2017 1:30 PM GMT)
வங்காளதேசம் நாட்டில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருபெண் உள்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
டாக்கா:
வங்ககாளதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்ம்குடார்பூர் பகுதியில் பிரபல ஜவுளி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ரசாயன பேரல்கள் சேமித்து வைத்திருக்கும் பகுதியில் இன்று திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ, மற்ற பகுதிகளையும் பதம்பார்த்தது.
தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் சிக்கி, 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், அங்கு வேலை செய்துகொண்டிருந்த மேலும் சிலரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக ஜவுளி ஆலையின் பொது மேலாளர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு தலைநகர் டாக்காவில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய சுமார் 3000 பேரில் பெரும்பாலும் பெண்கள் உள்பட 1135 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
வங்ககாளதேசத்தின் முன்ஷிகஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட சார்ம்குடார்பூர் பகுதியில் பிரபல ஜவுளி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் ரசாயன பேரல்கள் சேமித்து வைத்திருக்கும் பகுதியில் இன்று திடீரென தீப்பிடித்தது. மளமளவெனப் பரவிய தீ, மற்ற பகுதிகளையும் பதம்பார்த்தது.
தகவல் அறிந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் சிக்கி, 6 பேர் உடல் கருகி உயிரிழந்ததாகவும், அங்கு வேலை செய்துகொண்டிருந்த மேலும் சிலரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக ஜவுளி ஆலையின் பொது மேலாளர் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு தலைநகர் டாக்காவில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய சுமார் 3000 பேரில் பெரும்பாலும் பெண்கள் உள்பட 1135 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X