என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிகவும் வலுவடைந்த மரியா புயல்: கரீபியன் தீவுகளை பலமாக தாக்கும் என எச்சரிக்கை
Byமாலை மலர்18 Sep 2017 11:43 PM GMT (Updated: 18 Sep 2017 11:43 PM GMT)
அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியாமி:
அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயலின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக மற்றொரு புயல் உருவாகி உள்ளது. மரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலும் கரீபியன் தீவுகளை நோக்கி முன்னேறி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி புயல் மிகவும் வலுவடைந்திருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் கரீபியன் தீவான டொமினிகாவை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மிகுந்த ஆபத்து விளைவிக்கும் 4-ம் வகை புயலாக மரியா மாறியுள்ள காரணத்தால் போர்ட்டோ ரிகோ மற்றும் விர்ஜின் தீவுகளை நாளை தாக்கலாம் என்றும், அந்த சமயத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இர்மா புயல் நகர்ந்த அதே பாதையில் இந்த புயலும் நகர்கிறது. இதனால், குவாதலூப், மர்த்தினிக், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், மான்செராட், போர்ட்டோ ரிகோ ஆகிய தீவுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மரியா புயல் வலுவடைந்துள்ளதாகவும், சில மணி நேரங்களில் கரீபியன் தீவுகளை பலமாக தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் தீவுகள் மற்றும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இர்மா புயலின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக மற்றொரு புயல் உருவாகி உள்ளது. மரியா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலும் கரீபியன் தீவுகளை நோக்கி முன்னேறி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி புயல் மிகவும் வலுவடைந்திருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சில மணி நேரங்களில் கரீபியன் தீவான டொமினிகாவை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மிகுந்த ஆபத்து விளைவிக்கும் 4-ம் வகை புயலாக மரியா மாறியுள்ள காரணத்தால் போர்ட்டோ ரிகோ மற்றும் விர்ஜின் தீவுகளை நாளை தாக்கலாம் என்றும், அந்த சமயத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இர்மா புயல் நகர்ந்த அதே பாதையில் இந்த புயலும் நகர்கிறது. இதனால், குவாதலூப், மர்த்தினிக், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், மான்செராட், போர்ட்டோ ரிகோ ஆகிய தீவுகளுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X