search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: ஆப்கான் எல்லைப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமான தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலி
    X

    பாகிஸ்தான்: ஆப்கான் எல்லைப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமான தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலி

    பாகிஸ்தானின் ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    இஸ்லாமபாத்,

    பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பழங்குடியின பகுதியான சர்மனாக் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த பகுதிகளை குறிவைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் கமாண்டர் மவுல்வி மொஹிபுல்லாவின் வீட்டை குறிவைத்து அமெரிக்க விமானம் தாக்குதல் நடத்தியது. அந்த விமானம் வீசிய இரு குண்டுகள் வெடித்ததில் அந்த வீடு இடிந்து தரைமட்டமானது. இந்த தாக்குதலில் மவுல்வி மொஹிபுல்லா உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அங்குள்ள பொதுமக்களும் உறுதிசெய்துள்ளனர்.

    பாகிஸ்தானை வெளிப்படையாக விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆப்கானிஸ்தானுடன் புதிய கொள்கைகளை பின்பற்ற இருப்பதாக அறிவித்த பின்னர், இப்பகுதியில் அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த ஜூன் மாதம், ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹக்கானி அமைப்பின் தளபதி கொல்லப்பட்டார்.
    Next Story
    ×