என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்12 Sep 2017 9:05 PM GMT (Updated: 12 Sep 2017 9:05 PM GMT)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் 26-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கொழும்பு:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் தாக்கினார்கள். படகுகளையும் சிறைபிடித்தனர்.
பின்பு மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரித்து விட்டு நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மீனவர்கள் அனைவரையும் 26-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 12 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக எல்லை தாண்டி வந்ததாகவும், அப்போது இலங்கை கடற்படையினர் பிடித்து விட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 12 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் தாக்கினார்கள். படகுகளையும் சிறைபிடித்தனர்.
பின்பு மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து விசாரித்து விட்டு நேற்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மீனவர்கள் அனைவரையும் 26-ந் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 12 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பலத்த மழை மற்றும் காற்று காரணமாக எல்லை தாண்டி வந்ததாகவும், அப்போது இலங்கை கடற்படையினர் பிடித்து விட்டதாகவும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X