என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது: அதிபர் டொனால்ட் டிரம்ப்
Byமாலை மலர்11 Sep 2017 11:47 PM GMT (Updated: 11 Sep 2017 11:47 PM GMT)
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தில் செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையத்தின் மீது செப்டம்பர் 11ஆம் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வர்த்தக மையம் மீது விமானங்களால் மோதி தகர்த்ததில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். உலகில் உள்ள எந்த சக்தியாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை டிரம்ப் நினைவு கூர்ந்தார். இதில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளும் முதல் இரட்டை கோபுர தாக்குதலுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தில் செயல்பட்டு வந்த உலக வர்த்தக மையத்தின் மீது செப்டம்பர் 11ஆம் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வர்த்தக மையம் மீது விமானங்களால் மோதி தகர்த்ததில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். 6,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறோம். உலகில் உள்ள எந்த சக்தியாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை டிரம்ப் நினைவு கூர்ந்தார். இதில் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளும் முதல் இரட்டை கோபுர தாக்குதலுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X