என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு
Byமாலை மலர்11 Sep 2017 10:02 PM GMT (Updated: 11 Sep 2017 10:02 PM GMT)
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்ற ராகுல்காந்தியை காங்கிரசின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா, அமெரிக்காவின் இந்திய தேசிய காங்கிரசுக்கான தலைவர் சத் சிங் மற்றும் திரளானோர் உற்சாகமாக வரவேற்றனர்
வாஷிங்டன்:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நேற்று சான்பிரான்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை காங்கிரசின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா, அமெரிக்காவின் இந்திய தேசிய காங்கிரசுக்கான தலைவர் சத் சிங் மற்றும் திரளானோர் உற்சாகமாக வரவேற்றனர். இன்று(செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே ராகுல்காந்தி பேசுகிறார்.
சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல்காந்தி லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்கிறார். அங்குள்ள ஆஸ்பென் நிறுவனத்தில் சிந்தனையாளர் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் நகரில் இதேபோல் சிந்தனையாளர் சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் அவர் கலந்து பேசுகிறார்.
தனது 2 வார பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்பாக நியூயார்க் நகரில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்காவில் 2 வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் நேற்று சான்பிரான்சிஸ்கோ நகர் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை காங்கிரசின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா, அமெரிக்காவின் இந்திய தேசிய காங்கிரசுக்கான தலைவர் சத் சிங் மற்றும் திரளானோர் உற்சாகமாக வரவேற்றனர். இன்று(செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியா 70: முன்னோக்கிய பாதையின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் மாணவர்களிடையே ராகுல்காந்தி பேசுகிறார்.
சான்பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு ராகுல்காந்தி லாஸ்ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்கிறார். அங்குள்ள ஆஸ்பென் நிறுவனத்தில் சிந்தனையாளர் சமூகத்தினருடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் நகரில் இதேபோல் சிந்தனையாளர் சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் அவர் கலந்து பேசுகிறார்.
தனது 2 வார பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் முன்பாக நியூயார்க் நகரில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X