என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிப்போம்: அமெரிக்கா எச்சரிக்கை
Byமாலை மலர்7 Sep 2017 6:41 AM GMT (Updated: 7 Sep 2017 6:41 AM GMT)
வட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்:
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
சமீபத்தில் மேலும் ஒரு சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்தாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், வட கொரியாவோ தாங்கள் நடத்தியது அணு குண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைதான் என கூறுகிறது.
இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் நடத்திய வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை ஐ.நா. விதிக்கத் தவறினால், அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுபற்றி அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்டீவ் மனுசின் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு நிறைவேற்று உத்தரவு தயாரிக்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தயாராக உள்ளது.
இந்த உத்தரவானது, வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் எனக்கு அங்கீகாரம் அளிக்கும். இந்த விஷயத்தில் ஐ.நா.வின் நடவடிக்கையைப் பொருத்து, ஜனாதிபதி தனது முடிவை தெரிவிப்பார்” என்றார்.
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
சமீபத்தில் மேலும் ஒரு சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்தாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், வட கொரியாவோ தாங்கள் நடத்தியது அணு குண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைதான் என கூறுகிறது.
இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் நடத்திய வடகொரியா மீது கூடுதல் பொருளாதார தடைகளை ஐ.நா. விதிக்கத் தவறினால், அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுபற்றி அமெரிக்க நிதித்துறை மந்திரி ஸ்டீவ் மனுசின் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு நிறைவேற்று உத்தரவு தயாரிக்கப்பட்டுள்ளது. அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தயாராக உள்ளது.
இந்த உத்தரவானது, வடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் எனக்கு அங்கீகாரம் அளிக்கும். இந்த விஷயத்தில் ஐ.நா.வின் நடவடிக்கையைப் பொருத்து, ஜனாதிபதி தனது முடிவை தெரிவிப்பார்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X